தி.மு.க. வின் வேட்பாளர் நேர்காணலுக்கு வந்திருந்த போஸ் என்பவர் நேர்கணல் அறைக்குள் வந்தவுடன் கலைஞர் அவரைப் பார்த்து உட்காரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் உட்காராமல் பாதி குனிந்த நிலையில் நின்று கொண்டு பவ்யம் காட்டியுள்ளார். அப்போது அவர் தலைவரே! நான் 35 வருஷம் கட்சியில இருக்கேன், 22 முறை ஜெயிலுக்குப் போயிருக்கேன் எப்படியாவது எனக்கு இந்த முறை சீட் கொடுங்க தலைவரே! என்று கூறி அழுதே விட்டாரம்.
ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன் ஆகிய மூவரும் எதிரும் புதிருமாக இருக்கிறர்கள் என்று தான் செய்திகள் வருகின்றன. ஆனால் இவர்கள் மூவரும் எங்கு சென்றாலும் ஸ்டாலினின் "லேண்ட் ரோவர்" காரில் ஒன்றாகத்தான் செல்கிறார்களாம்.
தி.மு.க. வின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் குடி தண்ணீர் வசதி இல்லையாம். கட்சிக்காரர்கள் கூட தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் தண்ணீர் பாட்டிலை விலைக்கு வாங்கித்தான் குடிக்க வேண்டுமாம்.
கலைஞர் பிரச்சாரம் செய்ய பென்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக சொகுசு கார் ரெடியாகி அறிவாலயத்திற்கு வந்து விட்டதாம். இந்த கார் பேராசிரியர் அன்பழகன் பெயரில் தான் பதியப் பட்டுள்ளதாம்.
நீலகிரி மாவட்டத்தில் ஆ.ராசாவின் போட்டோ மற்றும் பெயர் போட்டு போஸ்டர், பேனர் எதுவும் வைக்கக் கூடாது என அண்ணன் அழகிரி கூறியதை ராசாவின் ஆதரவாளர்கள் ஏற்க மறுத்து விட்டார்களாம். தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என கூறிவிட்டார்களாம்.
Mar 22, 2011, 9:29:00 AM
வடை..