ஆ.ராசா : கலைஞர் கிட்டத்தான் கொடுத்தேன்
சி.பி.ஐ : எல்லாப் பணத்தையும் ஏன் அவர்கிட்ட கொடுத்திட்டீங்க?
ஆ.ராசா : அவர்தான் சொன்னாரு "மணி"(money) எல்லாத்தையும் நான் வச்சிக்கிறேன். "கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு.
சி.பி.ஐ : !!!!!!!!!!!!!. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
ஆ.ராசா : பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. அதனால ஒத்துக்கிட்டேன்.
சி.பி.ஐ. : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
--------------------------------------------@@@-----------------------------------------------------------
நிருபர் : நான் எப்பவும் கடவுளோட தான் கூட்டணின்னு சொன்னீங்க. இப்ப ஏன் "அம்மா" கிட்ட கூட்டணி சேர்ந்தீங்க.
விஜயகாந்த் : அட என்னங்க இது கூடவா தெரியல? என்னைக்குமே "அம்மா" தாங்க நமக்கெல்லாம் கடவுள்.
நிருபர் : நீங்க ஒரு பெரிய குடிகாரன்னு "அம்மா" சொன்னாங்களே? மறந்திட்டீங்களா?
விஜயகாந்த் : ஐயயோ! அவங்க அப்படி சொல்லலை. நான் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த "குடிமகன்" அப்படீன்னு தான் சொன்னாங்க. அத இந்த பத்திரிக்கைகள் தான் தப்பா வெளியிட்டுருச்சு.
நிருபர் : "ஆமா அந்த அம்மா தான் எனக்கு ஊத்தி குடுத்துச்சுன்னு" நீங்க சொன்னீங்களே?
விஜயகாந்த் : ஐயயோ ! இப்படி தப்பாவே புரிஞ்சுகிட்ட நான் என்ன செய்வேன். நான் அப்படி சொல்லலைங்க. "அம்மா தான் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்கன்னு" சொன்னேன்.
நிருபர்(மனதுக்குள்) : இது அந்தர் பல்டிடா சாமி! (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)
---------------------------------------------@@@----------------------------------------------------------
தி.மு.க. கட்சிக்காரர் : மாப்ள நம்ம தெருவுல கொசு தொல்லை அதிகமாயிடிச்சுல?
அ.தி.மு.க கட்சிக்காரர் : அதுக்கு உங்க தலைவர் தாண்டா காரணம்.
தி.மு.க கட்சிக்காரர் : ஊருக்குள்ள ஏதோ ஒரு கிழவி செத்துப்போச்சாமே?
அ.தி.மு.க கட்சிக்காரர் : அதுக்கும் உங்க தலைவர் தாண்டா காரணம்.
தி.மு.க. கட்சிக்காரர் : இன்னிக்கு பெரிய மழை வரும் போல தெரியுதே?
அ.தி.மு.க. கட்சிக்காரர் : அதுக்கும் உங்க தலைவர் தாண்டா காரணம்.
தி.மு.க. கட்சிக்காரர் : ஆமா உன்னோட பொண்டாட்டி மாசமா இருக்காளாமே?
அ.தி.மு.க. கட்சிக்காரர் : அதுக்கும் உங்க தலைவர் தாண்டா காரணம்.
தி.மு.க. கட்சிக்காரர் : !!!!!!!!!!!!!?????????????????????????
---------------------------------------------@@@------------------------------------------------------
சோனியா காந்தி : கலைஞர் ஐயா! எங்களுக்கு 90 சீட் வேணும்.
கலைஞர் : ஐய்யோ! அது கட்டுபடியாகதுங்க மேடம். அதிக பட்சம் ஒரு 40 சீட் தரலாமான்னு யோசிச்சு சொல்றேன்.
சோனியா காந்தி : அப்ப நாம கூட்டணி வைக்கலாமான்னு நானும் யோசிச்சு சொல்றேன்.
கலைஞர் (மனதுக்குள்) : புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
Mar 3, 2011, 1:07:00 PM
I...