twitter


எப்போதும் வெற்றிபெற வேண்டும் என்றால், எல்லோராலும் விரும்பப்படுவது ரொம்ப முக்கியம்.

உலகெங்கும், சந்திப்புக்களின் போது ஒரு மனிதரிடம் என்னென்ன எதிர்பார்க்கப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்டவை உலகமுழுமைக்கும் பொதுவானவை.

இதோ அந்தப் பட்டியல் உங்களுக்காக.










1. உடலில் இருந்து எழும் அதீத துர்வாசமோ, அதீத நறுமணமோ  பிறரை முகம் சுளிக்க வைக்கும்.உடல் தூய்மையால் துர்வாசம் கட்டுப்படுத்தப்படுகிறது. மிதமான நறுமணம் கமழும் விதமாய் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்.


                                              ***********************************




2. உடலுக்கு பொருந்துகிற, கண்ணை உறுத்தாத ஆடைகள் நம்மைபற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
                                                   *********************************


3. சுவாச புத்துணர்ச்சி மிகமிக முக்கியம். 'பளீர்' பற்கள், துர்நாற்றமில்லாத சுவாசம் அவசியம்.
                                                                  ********************


4. நின்றாலும், அமர்ந்தாலும், நிமிர்ந்தே இருங்கள்.
                                                   *******************************


5. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். பிறர் பேசுகிறபோதும் அவர்களின் கண்களைப்பாருங்கள்.
                                                        **********************


6. இயல்பாகப் பேசுங்கள், மலர்ச்சியாக சிரியுங்கள்.
                                                    *******************************


7.யாரைப் பார்த்தாலும் புன்னகைப்பதை இயல்பாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
                                                  **********************************


8. நகைச்சுவையாகப் பேசும்போது அபத்தங்கள், அசிங்கங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறரைப் புண்படுத்தும் நகைச்சுவையையும் தவிர்த்துவிடுங்கள்.
                                 **********************




9. எல்லோரையும் அங்கீகரியுங்கள். யாரையும் புறக்கணிக்காதீர்கள்.
                                                  *****************************


10. உங்கள் மேல் பிரியமும் நம்பிக்கையும் உள்ளவராக இருங்கள்.
                                                     *****************************


11. எப்போதும் முகமலர்ச்சியுடன் இருங்கள்.கவலை தோய்ந்த முகத்துடன் யாரையும் சந்திக்காதீர்கள்.
                                                   *******************************


12. விரல் நகங்களை தூய்மையாகவும், அளவுடனும் வைத்துக்கொள்ளுங்கள்.
                                                    *********************************




 13. எந்த பிளாக்கில் சென்று எந்த பதிவைப் படித்தாலும் கண்டிப்பாக  உங்கள்  கருத்தை பதிவு செய்ய வேண்டும்.




                         *************************************************


முதல் 12 வழிகளை பின்பற்றா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்த 13 வழி மிக மிக மிக.....  முக்கியம்.

Jan 17, 2011 | 4 comments | Labels:

4 comments:

  1. Smart Plan
    Mar 1, 2011, 10:18:00 AM

    its very great sentence forever in my life

  1. ganeshkumar
    Mar 11, 2011, 11:48:00 AM

    Wonderful thoughts, especially the last one which made me to write here.

    Ganesh

  1. Srikumar
    Jul 20, 2011, 11:48:00 AM

    I like the sentences and want to use in my daily life.

  1. Hari
    Oct 7, 2011, 11:40:00 PM

    Very good brother