1. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.
**********************
2. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்.
3. அச்சம் எப்போது நெருங்குகிறதோ, அப்போதே அதை எதிர்த்து, அடித்து கொன்று விடுங்கள்.
*************************
4. ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்.
**********************************5. பெரும்பாலான நட்புகளின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
*********************6. ஒவ்வொரு வேலையை செய்யத் தொடங்கும் முன் உங்களை மூன்று கேள்விகள் கேளுங்கள்.
இதை ஏன் செய்கிறேன் ?
இந்த செயலின் விளைவுகள் என்ன ?
இதை வெற்றிகரமாக செய்வேனா ?
*****************************7. உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ, அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.
**********************************************8. அற்பமான உயிரினங்களிடம் கூட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்.
எப்போதும் சாணக்கியனாக இருங்கள். உலகத்தை வெல்லுங்கள்.
Jun 29, 2011, 9:13:00 AM
very enthustiastic